Posts

கவிதையானவள்

Image
அவளை பற்றி நினைத்தால் கவிதை தான் வருகிறது கவிதையை பற்றி நினைத்தால் வேறு என்ன வரும்? சீக்கிரம் முடிந்ததிலும் நெஞ்சில் நிறைந்ததிலும் அவளும் ஹைக்கூ கவிதையும் ஒன்றுதான்!

வாழ்கை அவ்வளவு சுலபம் இல்லை, ஆனா போராடணும்!

இத எழுதலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன் , இதை எழுதற அளவுக்கு என்ன சாதிச்சேன்னு மனசு கேக்குது , நிறைய தப்பு கூட இருக்கும்னு நினைக்கிறேன் . மனசில நனச்சத அப்படியே எழுதனும் .. அதுக்காகத்தான் இந்த பதிவு. கிட்டதட்ட 4 வருஷத்துக்கும் முன்னாடி, முதல் முறை பார்வை இல்லாதவங்களுக்காக படிக்க போனது இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு. ராஜேந்திரன் என்கிற இசை கல்லுரி மாணவனுக்கு படிச்சேன். ரொம்ப நல்ல படிக்கறீங்க , உங்கள மாதிரி வேகமா , தங்கு தடை இல்லாம படிக்கறவங்க நிறைய பேர் இல்லைன்னு சொன்னான். என்னமோ அதுவே அடுத்தடுத்த வாரம் போகறதுக்கு ஊக்கமா இருந்தது. ஒவ்வோரு வாரமும் வெவ்வேறு மாணவர்கள். நானும் செய்தி வாசிப்பவர் மாதிரி கஷ்டபட்டு, ஏற்ற இறக்கதோட படிக்க, அவங்க மத்தியிலே பேசப்படற அளவுக்கு வந்துட்டேன். வாரம் ஒரு முறை போகறத பெருமையா நெனச்சுகிட்டேன். என்னமோ நான் ரொம்ப பெரிய சமூக சேவை செய்யறா மாதிரி எல்லர் கிட்டேயும் சொன்னேன். இப்படி இருந்த நான் ஒரு முறை கோடம்பாக்கத்துல இருக்கிற ஹாஸ்டலுக்கு போனேன். அது ஒரு governement free hostel for sc/bc students. பார்வை இல்லாத 20 பேர் அங்கே இருக்காங்க. அவங்களுக்காக ஒதுக்க பட்ட ro...

மின்னலைப் பார்த்ததில்

Image
ஓரே.. ஒரு முறை என்னைக் கூப்பிடு, என் பெயராவது உன் உதடுகளை.. ஓரே.. ஒரு முறை என்னைப் பார், விழிகளின் வழியே உன்னுள் ஒரு நொடி நான். நிலவில் வசிப்பது சாத்தியமாம் உன்னில் நான்? நிலவினால் தான் அலைகள் உருவாகின்றன என் நெஞ்சிலும் கூட. எண்ணிக் கொண்டு இருக்கிறேன்... இப்பொழுது என்ன செய்கிறாய் என எப்பொழுதும். எப்பொழுதாவது என்னை எண்ணுவாய் என இப்பொழுதும். மின்னலைப் பார்த்ததில், கண் மட்டுமல்ல இதயமும் போனது. மின்னலுக்காக வானம் திறந்துதான் இருக்கிறது என் இதயமும்.

இதோ இன்னுமொரு..

Image
மேகங்கள் மல்லு கட்ட, சாலையெல்லாம் கறுப்பு பூக்கள் பூக்க, காற்றும் மரங்களும் சண்டையிட, தண்ணீர் கோலமிட, சில இதயங்கள் ஈரமாக, இதோ இன்னுமொரு மழைக்காலம்!

Its not luck but lobster claws

last week I was called by one of my friend to donate blood. Thats for his building contractor who was undergoing a major bypass heart surgery. While in the blood bank, the nurse said that the patient had received blood from 14 volunteers(which is more than required). 6 matching donors ( his group being b -ve) and the rest will be exchanged for b-ve group. "Lucky" might be the word that comes to your mind. But, the point is whatever we deserve comes to us. My dad always say " the result of the goodness will find its way back to the person, just like the calf comes back to the mother cow amidst huge cattle." I am sure it does! Even when we lose things, the ones which we deserve find its way back to us. Its not luck sometimes but lobster claws. Confused ? Look at this real story, A swimmer who lost his wallet during a late night dip has had it returned, thanks to a lobster! A deep sea diver caught the lobster and found it in the crustacean's claws. The wallet vanis...

என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள்

வாழ்க்கை எனக்கு பலமுறை வெறுத்து போனதுண்டு காலம் கூட கனமாய் தோன்றிய நாட்களுண்டு வாரம் ஒரு முறை இவர்களுக்காக படிக்க போவதை மட்டும் வாடிக்கை ஆக்கிக் கொண்டேன்.. எனக்காக கடந்த மூன்று வருடங்களாய் வாழ்கைக் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறேன் ஆணியால் எழுதுவதால் என்னவோ என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டார்கள் சூரியன் கூட நிலவுக்கு வெளிச்சம் தந்த பெருமையை அறிந்திருக்கலாம், இவர்கள் பெருமை அறியாத, வேண்டாத சூரியன்கள் இவர்கள் எனக்கு உபதேசம் செய்ததில்லை இவர்கள் வாழும் உபதேசங்கள் இவர்கள் நான் படிக்க கேட்பவர்கள் எனக்கு பாடம் கற்றுத்தருபவர்கள் தம் முகத்தை தாம் பார்த்ததில்லை இவர்கள்தாம் என் முகத்தை எனக்குக் காட்டியவர்கள் பார்க்காமலேயே என்னை வரைந்தவர்கள் தடி கொண்டு நடந்தே எனக்கு வழி காட்டியவர்கள் கண்ணில்லாமலேயே என் கண் திறந்தவர்கள் சினிமா, ஜீன்ஸ், காதல் போன்றவற்றுக்கு மட்டுமே, கல்லூரி வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் மத்தியில் இவர்களும் படிக்கிறார்கள் அதே புத்தகம், அதே பாடங்கள், அதே வாய்ப்பை தேடித்தராத போதும்! தன் காலில் நிற்க வேண்டி ஒரு போராட்டம் அமைதியாகவே, ஒவ்வோரு நாளும் இருட்டில் இருந்து கொண்டும் உழைக்கிறார்கள் வெள...

அப்படித்தான்

Image
கூட்டம் கூடவில்லை என மேகம் காத்திருக்குமா? கவிதை ஏழுத ஆளில்லை என்று நிலா மரியல் செய்து பார்த்ததுண்டா? பரிசு தரவில்லை என குயில் பாட மறுக்குமா? முகர்ந்து பார்ப்பவரில்லை என்று மலர் மொட்டாகுமா? உனக்கான என் காதலும் அப்படித்தான்!